Monday, 5 April 2010

கோவில்

வண்ணப் பட்டாடை உடுத்திய
வண்ணச் சிட்டுக்கள்
வட்டமிடத்துடிக்கும்
வரி வரியாய்க் காளையர்கள்
நகைக் கடையே கொலுமடமாய்
நங்கையர்கள் நானூறு பேர்
நன்றாக நோட்டமிடும்
நாலைந்து திருடர் கும்பல்
கள்ளுக் குடித்தவர்போல்
கலையாடும் காவடிகள்
காண அழகுப் பெண்கள் வந்தால்
காவடியில் வேகம் கூடும்
அன்று பார்த்த திரைப் படத்தை
அழகழகாய் சொல்லிடுவார்
ஆண்கள் கொஞ்சம் கூடிவிட்டால்
அரசியலும் சேர்ந்து விடும்
கோவில் என்றால் பக்தி என்பர் -
அங்கோ நாதியற்று நிற்கின்றார் கடவுள்!

No comments:

Post a Comment